districts

img

கும்பகோணம் மாசி மக பெருவிழா

கும்பகோணம், மார்ச் 6-  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் வருடம் தோறும் மாசி மாதம் மகம்  நட்சத்திரத்தில் மகாமக குளக்கரையில் முன்னோர் களுக்கு தர்ப்பணம் கொடுத்து புனித நீராடும் நிகழ்ச்சி நடை பெற்று வருகிறது.  இந்த ஆண்டிற்கான மாசி  மகத்தை ஒட்டி கும்ப கோணத்தை சுற்றியுள்ள ஆதி கும்பேஸ்வரர், அபிமு கேஸ்வரர், பானபுரீஸ்வரர் என 12 சிவ திருத்தலங்களில்  இருந்து தீர்த்தவாரி நிகழ்ச்சி யும் தேரோட்டமும் கடந்த 10  நாட்களாக நடந்து வந்தது.  இந்நிலையில் கும்ப கோணம் மகாமகக் குளம், பொற்றாமரை குளம், காவேரி ஆறு ஆகிய பகுதி களில் புனித நீராடுவதற்கு ஏராளமான வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் திறளாக கலந்து கொண்டனர்.