கும்பகோணம், ஏப்.8- கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரி வரலாற்றுத்துறையில் ‘‘ஹிஸ்டொ பெஸ்ட் (HISTO-FEST 2023) என்ற சிறப்புக் கருத்த ரங்கம்’’ கல்லூரி முதல்வர் நா.தனராஜன் தலைமையில் நடைபெற்றது. வரலாற்றுத் துறைத்தலைவர் ப.சகா தேவன் வரவேற்றார். இந்திய பண்பாட்டுத் துறைத் தலைவர் சீ.தங்கராஜ் வாழ்த்திப் பேசினார். சிறப்பு அழைப்பாளர் சேலம் அரசினர் கலைக் கல்லூரி வரலாற்றுத்துறைத் தலைவர் அ.தென்னரசு ‘‘மின்னணு ஊடக வழியாக வரலாற்றைக் கற்பித்தல்’’ எனும் தலைப்பில் பேசினார். வரலாற்றுத்துறை பேராசிரியர் ந.ரமேஷ்குமார் நன்றி கூறி னார். நிகழ்வில் ஆங்கிலத்துறைத்தலைவர் சா.சரவணன், புவியியல் துறைத்தலைவர் பா.கோபு, வணிக மேலாண்மையியல் துறைத் தலைவர் மோகன்ராஜ், தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் த.சாமிநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.