கும்பகோணம், ஜன.20- சுவாமி விவேகானந்தரின் 160-ஆவது பிறந்தநாள் மற்றும் தேசிய இளையோர் தினத்தை முன்னிட்டு கும்பகோணம் போர்டர் ஹாலில் தேசிய அளவில் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் க.அன்பழகன், வட்டாட்சியர் ஞ.வெங்கடேஷ்வரன், காவல் துணை கண்காணிப்பாளர் ஏ.அசோகன், நேரு யுவகேந்திரா துணை இயக்குநர் ஆ.நீலகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி) யில் பயிலும் கணிதவியல் துறையில் முதுகலை 2-ஆம் ஆண்டு பயிலும் சி.கலைவாணி (உறைவாள் போட்டி), பொருளியல் துறையில் இளங்கலை 3-ஆம் ஆண்டு பயிலும் சு.லியோ (கிரிக்கெட்) மற்றும் ஆங்கிலத் துறையில் இளங்கலை 3-ஆம் ஆண்டு பயிலும் செந்தமிழ்செல்வன் (ஈட்டி எறிதல்) ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். தேசிய அளவில் வெற்றி பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்த வீரர்களை கல்லூரி முதல்வர் நா.தனராஜன் மற்றும் கல்லூரி உடற்கல்வி இயக்குநர் மு.சங்கர் ஆகியோர் பாராட்டினர்.