districts

கொள்ளிடம் கரையோர கிராமங்களில் ஜவாஹிருல்லா எம்எல்ஏ ஆய்வு

அய்யம்பேட்டை, ஜூலை 22 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சட்ட மன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா வியா ழனன்று கொள்ளிடக் கரையோரம் உள்ள பட்டுக்குடி, கூடலூர், புத்தூர், குடிகாடு உள்ளிட்ட கிராமங்களை நேரில் சென்று பார்வையிட்டார்.  கொள்ளிடம் வெள்ளத்தில் கூடலூரைச் சேர்ந்த சீராளனின் 8 ஆடுகள், ஞானசேக ரின் 10 ஆடுகள் அடித்துச் செல்லப்பட்டன. ஜவாஹிருல்லா எம்எல்ஏ அவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். இதேபோன்று குடிகாடு, பட்டுக்குடியில் பயிரிடப்பட்டிருந்த மிளகாய், கொத்தரை, கத்தரி, வெண்டைக் காய் உள்ளிட்டவற்றையும், புத்தூரில் அறு வடைக்கு தயாராக இருந்து வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களையும் பார்வை யிட்டார். வெள்ள நீரால் பாதிக்கப்பட்ட 50- க்கும் மேற்பட்ட செங்கற் கால்வாய்களையும் பார்வையிட்டார்.  அவரிடம், கோவிந்த நாட்டுச்சேரி ஊராட்சி மன்றத் தலைவர் ஜெய்சங்கர், பழுதடைந்த நிலையில் உள்ள மண்ணி யாற்று பாலத்தை புதிதாக கட்டித் தர வேண்டும். குடிகாட்டிற்கு சமுதாயக் கூடம்  கட்டித் தர வேண்டும். புத்தூரில் புதிதாக ரேசன் கடைக்கு கட்டிடம் கட்டித் தர வேண்டும். பழுதடைந்த பட்டுக்குடி-குடிக்காடு  6 கி.மீ சாலையை புதிதாக அமைத்துத் தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்  வைத்தார். இதில் மாவட்டக் கவுன்சிலர் தாமரைச் செல்வன், பாபநாசம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவி சுமதி, திமுக மாவட்ட  துணைச் செயலாளர் அய்யா ராசு உள்பட பலர் உடனிருந்தனர்.