தஞ்சாவூர், ஏப்.3- தஞ்சாவூர் மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கம் (சிஐடியு) மாவட்ட நிர்வாகக் குழுக்கூட்டம், மாவட்டத் தலைவர் க.மதியழகன் தலைமை யில் நடைபெற்றது. கூட்டத்தில், சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெயபால், டாஸ் மாக் ஊழியர் சங்க மாவட்டச் செய லாளர் க.வீரையன், மாவட்டப் பொருளாளர் ஏ.ஜி.பன்னீர்செல் வம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின்னர் சி.ஜெய பால் செய்தியாளர்களிடம் கூறுகை யில், ‘‘தஞ்சாவூர் மாவட்டத்தில், சுமார் 160 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. டாஸ்மாக் கடை ஊழியர்களிடம் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களின் பெயரை பயன்படுத்தி, கரூர் கம்பெனி என்ற பெயரில், கடைகளில் தினசரி விற்பனையா கும் தொகைக்கு ஏற்ப, ஒரு லட்சம் ரூபாய்க்கு, 500 ரூபாய்- வீதம் நாள் ஒன்றுக்கு கமிசனாக தர வேண்டுமென்று ஊழியர்களை மிரட்டி கட்டாய வசூல் நடைபெறு கிறது. இது குறித்து டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்கள், விற்பனை யாளர்கள் புலம்பி வருகின்றனர். இதன்மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 5 லட்சம் ரூபாய் வரை கட் டாய வசூல் நடைபெறுகிறது. அத்து டன், கட்டாய வசூலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்களை, டாஸ்மாக் மேலாளர் மூலம் மிரட்டி வருகின்றனர். கமிஷன் கொடுக்க வில்லை என்றால் வேலைவிட்டு நீக்குவதாகவும், கடையை மூடுவ தாகவும், புரோக்கர்களுக்கு ஆதர வாக ஊழியர்களை மிரட்டி பகி ரங்கமாக மேலாளர் பேசி வரு கிறார். மேலும், அரசு நிர்ணயித்த விலையை விட ரூ.10 பாட்டிலுக்கு கூடுதலாக விற்பனை செய்ய வேண்டுமென்று மாவட்ட மேலா ளர், டாஸ்மாக் கடை ஊழியர் களுக்கு வாய்மொழி உத்தரவு போட்டுள்ளார். கரூர் கம்பெனியின் இடைத்தரகர்கள், டாஸ்மாக் ஊழி யர்களிடம் மதுபான பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 விற்பனை செய்ய வேண்டுமென்று மிரட்டுகிறார்கள். இதனால், வாடிக்கையாளருக்கும், ஊழியர்களுக்கும் மோதல் ஏற் படும் நிலை உருவாகி வருவதால், ஊழியர்கள் அச்சத்தில் உள்ளனர். அமைச்சரின் பெயரை பயன்படுத்தி கரூர் கம்பெனி என்ற பெயரில் வசூல் வேட்டையில் ஈடு படும் இடைத்தரகர்களை உடனடி யாக கைது செய்ய வேண்டும். மேலும், அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்ற மாவட்ட மேலாளர் மீதும் உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும். தற்போது நடைபெறும் கட்டாய வசூல் வேட்டைக்கு பெரும் துணை யாக இளநிலை உதவியாளர்கள் தான் உள்ளனர். இரண்டு ஆண்டு கள் நிறைவடைந்த இளநிலை உத வியாளர்கள் அனைவரையும் வேறு மாவட்டத்திற்கு பணியிட மாறுதல் செய்ய வேண்டும். இதில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக் காத பட்சத்தில், கரூர் கம்பெனி புரோக்கர்களுக்கு எதிராக டாஸ் மாக் கடைகளுக்கு முன்பு சிஐ டியு சார்பில் பொதுமக்களுடன் இணைந்து போராட்டம் நடத் தப்படும்’’ என்று தெரிவித்தார்.