districts

ராசா மிராசுதார் மருத்துவமனையில் கண்ணொளி தினம் கண் தானம் செய்வதை ஊக்குவிக்க வலியுறுத்தல்

தஞ்சாவூர், அக். 14 - தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவ மனையில் வியாழக்கிழமை உலக கண் ணொளி தினம் கடைபிடிக்கப்பட்டது.  இதனை முன்னிட்டு இளங்கலை மாண வர்களால் உருவாக்கப்பட்ட கண்ணொளி பற்றிய கண்காட்சிகள் பொதுமக்கள் பார்வைக் காக வைக்கப்பட்டன. கண்காட்சியை தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை முதல்வர் பாலாஜிநாதன், மருத்துவ மனை கண்காணிப்பாளர் மருதுதுரை, நிலைய மருத்துவ அலுவலர் உஷா தேவி மற்றும் மருத்துவர்கள் பார்வையிட்டனர். இதனைத் தொடர்ந்து கண்ணொளி பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜி நாதன் பேசுகையில், “தஞ்சை ராசா மிராசு தாரர் அரசு மருத்துவமனையில், கண் அறுவை சிகிச்சை பிரிவு கடந்த 100 ஆண்டு களுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இங்கு கண் நோய்க்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மாதாந்திர கண்புரை அறுவை சிகிச்சையில், தமிழக அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளது. கண் தானம் செய்வ தற்கு பொதுமக்களை நாம் ஊக்குவிக்க வேண்டும். ஒருவர் கண் தானம் செய்தால் மற்றவர்களுக்கு பார்வை கொடுக்கலாம். 35 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தவறா மல் கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்” என்றார்.