districts

img

பேராவூரணியில் கபடி போட்டி முதல் பரிசை வென்ற மதுரை, திருவாரூர் அணி

தஞ்சாவூர், ஜூலை 19 -  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள நாடியம்-ஊடையக்காடு நண்பர்கள் கபடிக் கழகம் சார்பில், நாடியம் முத்துமாரியம்மன் கோவில் திடலில், மறைந்த முன்னாள் கபடி வீரர் வி.எஸ்.வி.ராகவன் நினைவாக ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாபெரும் கபடிப் போட்டி நடைபெற்றது.  இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் திருவாரூர் மாவட்டம் வடுவூர் அணி முதல் பரிசையும், இராமநாத புரம் மாவட்டம், முள்ளிமுனை முள்ளை வெண்புறா அணி இரண்டாம் பரிசையும், திருப்பாலைக்குடி அணி  மூன்றாம் பரிசையும், பாசிப்பட்டினம் அணி நான்காம் பரிசையும் பெற்றன.  பெண்கள் பிரிவில், மதுரை மாவட்டம் சித்தம்பட்டி சி.பி.ஆர் அணி முதல் பரிசையும், திருவாரூர் மாவட்டம்  கட்டக்குடி அணி இரண்டாம் பரிசையும், தஞ்சை மாவட்டம் தென்னமநாடு தென்னவன் ஸ்போர்ட்ஸ் கிளப்  அணி மூன்றாம் பரிசையும், திருவாரூர் மாவட்டம் நன்னி லம் செல்வம் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி நான்காம் பரிசை யும் வென்றன.  வெற்றி பெற்ற அணியினருக்கு மொத்தப் பரிசாக ரூ.3,01,500 ரொக்கத்துடன், சுழற்கோப்பையும் வழங்கப் பட்டது. போட்டியில் ஆண்கள் பிரிவில் 28 அணிகளும், பெண்கள் பிரிவில் 12 அணிகளும் என தமிழகம் முழு வதும் இருந்து வந்து கலந்து கொண்டனர்.