districts

img

கட்டப்பஞ்சாயத்து நிலையமாக மாறிய மதுக்கூர் காவல்நிலையம்

தஞ்சாவூர், மார்ச் 28-  மதுக்கூர் காவல்நிலை யம் கட்டப்பஞ்சாயத்து நிலையமாக மாறியதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தத் திரண்ட தலை வர்களிடம் காவல்துணைக் கண்காணிப்பாளர் பிரித்வி ராஜ் சவுகான் பேச்சு வார்த்தை நடத்தினார். தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூரில் மக்கள் பிரச்ச னைக்காக காவல் நிலையம் சென்ற மார்க்சிஸ்ட் கம்யூ  னிஸ்ட் கட்சியின் தலைவர் களை தரக்குறைவாக, அவ தூறாகப் பேசிய காவல் துறை அதிகாரிகளைக் கண்  டித்தும், சிவில் பிரச்சனை களில் அத்துமீறி தலையிட்டு கட்டப் பஞ்சாயத்துப் பேசு வதைக் கண்டித்தும் மதுக்  கூர் காவல்துறை உதவி ஆய்  வாளர் வேம்பு, சிறப்பு உதவி  ஆய்வாளர் விஜய் ஆனந்த் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மதுக்கூர் காவல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திரண்டனர். இதையடுத்து பட்டுக் கோட்டை காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் பிரித்விராஜ் சவுகான், மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள், எம்.செல்வம், ஆர்.கலைச்செல்வி, மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.சி.  பழனிவேலு, ஒன்றியச் செய லாளர் (பொறுப்பு), எம். அய்யநாதன், பட்டுக் கோட்டை ஒன்றியச் செயலா ளர் எஸ்.கந்தசாமி ஆகி யோரை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினார். நடை பெற்ற சம்பவங்களை விசா ரித்து நடவடிக்கை எடுப்ப தாக பிரித்விராஜ் உறுதி யளித்தார். தொடர்ந்து பட்டுக் கோட்டை காவல்துறை ஆய்  வாளர் ராமமூர்த்தி, மார்க்  சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித்  தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அப் போது நடந்த தவறுக்கு வருத்  தம் தெரிவித்தார். எதிர்காலத்  தில் இது போல் தவறுகள்  நடக்காது. தரக்குறைவாக நடந்து கொண்ட காவல் துறை அதிகாரிகள் மீது நட வடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார். இதை யடுத்து ஆர்ப்பாட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.