தஞ்சாவூர், மார்ச் 13- தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன் ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்விக் கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 421 மனுக்களை பொதுமக்கள் ஆட்சியரிடம் வழங்கினர். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர், வருவாய் துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உத வித் தொகை பெறுவதற்கான ஆணைகளை 2 நபர்களுக் கும், கடந்த ஆண்டு தேர் தீ விபத்தில் இறந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு விலையில்லா வீட்டு மனை பட்டா விற்கான ஆணைகள் மற்றும் புதிய கான்கிரீட் வீடு கட்டு வதற்கான ஆணைகளை 3 நபர்களுக்கு வழங்கினார். பின்னர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நெகிழி மாசில்லா சுற்றுச்சூழல் மற்றும் பொருட்கள் விழிப்பு ணர்வு சுவரொட்டியினை வெளியிட்டார்.