districts

img

புதுமைப் பெண் திட்டம் தஞ்சையில் 3,765 மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கல்

தஞ்சாவூர், செப்.6 - தஞ்சாவூரில் தனியார் திருமண மண்டபத் தில், முதல்வரின் நிகழ்ச்சி காணொலி வாயி லாக ஒளிபரப்பப்பட்டது. பின்னர் தஞ்சாவூ ரில் மாணவிகளுக்கு மூவலூர் இராமாமிர்தம்  அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டமான  புதுமைப் பெண் திட்டத்தின் கீழ், 3,765 மாணவி களுக்கு நிதி உதவியை வழங்கி, அதற்கான  வங்கி ஏடிஎம் கார்டுகளை மாவட்ட ஆட்சியர்  தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேகரன் (திருவையாறு), டி.கே.ஜி. நீலமேகம்(தஞ்சாவூர்),  ஜவாஹிருல்லா (பாபநாசம்), மாநகராட்சி மேயர் சண்.ராமநா தன், மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ்  ஆலிவர், கூடுதல் ஆட்சியர் சுகபுத்ரா, மாவட்ட சமூக நல அலுவலர் ராஜேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;