கும்பகோணம், ஜூன் 3- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் ஆர்.எஸ்.என்று அழைக்கப்படும் ஆர்.சாமிநாதன் நினைவு கொடிக்கம்பம்-கல்வெட்டு திறப்பு மற்றும் கொடியேற்று விழா திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியம் நாச்சி யார்கோவிலில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றியச் செயலாளர் பழனிவேல் தலைமை வகித்தார். சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் வாசுகி, கட்சிக் கொடியை ஏற்றி கல்வெட்டை திறந்து வைத்தார். மாவட்ட செய லாளர் சின்னை.பாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஜெயபால், அருளரசன், மாவட்ட குழு உறுப்பினர் ஜீவ பாரதி, நாகராஜன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.