தஞ்சாவூர் மாவட்டம் நாச்சியார்கோவில் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மகளிர் தினத்தையொட்டி ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள ‘‘அடல் டிங்கரிங் ஆய்வகம்’’ திறக்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் ஆ.அல்லி தலைமையில் நடைபெற்றது. விழாவில் கும்பகோணம் மாவட்ட கல்வி அதிகாரி ரவிச்சந்திரன் முன்னிலையில் தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சிவகுமார் திறந்து வைத்தார்.