districts

img

மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டியில் ஏழுமலையான் கல்லூரி மாணவர்கள் சாதனை

குடவாசல், நவ.18 -  ஐபிஏஏ நாகை - பாண்டிச் சேரி பாலிடெக்னிக் கல்லூரி கள் இடையே மண்டல அள வில் கேரம், சதுரங்கம், மேஜைப்பந்து மற்றும் இறகு பந்து ஆகிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. திருவாரூர் மாவட்டம் நன்னி லம் வட்டம், கொல்லுமாங் குடியில் உள்ள ஏழுமலை யான் கல்லூரியில் நடை பெற்ற இப்போட்டிகளில் 17 பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்து 200-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.  இப்போட்டியில் இறகுப் பந்து மற்றும் மேஜைப்பந்து போட்டியில் ஏழுமலையான் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் இரண்டாம் இடம் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை கல்லூரியின் தலைவர் கே.ரவி, தாளாளர் சி.ஆர்.தேவகி, இயக்குநர்கள் காவியபிரியா மற்றும் மதுமதி ஆகியோர் வாழ்த்தி னர். மேலும் வென்ற விளை யாட்டு வீரர்களுக்கு கல்லூரி யின் வைஸ்சேர்மன் ராக்கவ் தினேஷ், முதல்வர்  பூபதி மற்றும் மேலாளர் துரை சரவணன் சான்றிதழ் கள், பதக்கங்கள் மற்றும் கோப்பை வழங்கி பாராட்டி னர்.

;