districts

அஞ்சல் துறையில் ஆண்டுக்கு ரூ. 399-ல் ரூ.10 லட்சத்திற்கான விபத்து காப்பீடு

தஞ்சாவூர் செப்.4-  இந்திய அஞ்சல் துறை மூலமாக ஆண்டுக்கு ரூ.399 ரூபாய் செலுத்தி, ரூ.  10 லட்சத்திற்கான விபத்து காப்பீட்டை  பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து பட்டுக்கோட்டை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஆறு.பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “அஞ்சல் துறை யின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட்  பேமெண்ட்ஸ் வங்கியின் (IPPB) மூலம்,  ஆண்டிற்கு ரூ.399-ல், ரூ.10 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீட்டு திட்டம் வழங்கப்படுகிறது. அனைத்து மக்களுக்கும் காப்பீட்டு  திட்டங்களின் பலன்கள் சென்றடை யும் வகையில், அனைத்து அஞ்சலகங் கள் (தபால்காரர்/கிராம அஞ்சல் ஊழி யர்கள்) மூலம் இந்த விபத்துக் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 18  வயது முதல் 65 வயது வரை உள்ள வர்கள் இந்த காப்பீட்டு திட்டத்தில் சேர லாம். விண்ணப்ப படிவம், அடையாள /முகவரி சான்றின் நகல்கள் போன்ற எந்த விதமான காகித பயன்பாடுமின்றி, தபால்காரர் கொண்டு வரும் ஸ்மார்ட் போன்/விரல் ரேகை மூலம், வெறும் 5 நிமிடங்களில் முற்றிலும் டிஜிட்டல் முறையில் இந்த பாலிசி வழங்கப்படுகிறது.

திட்டத்தின் சிறப்பம்சங்கள்
ரூ.10 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீடு (விபத்தினால் ஏற்படும் உயிரி ழப்பு/நிரந்தர முழு ஊனம்/நிரந்தர  பகுதி ஊனம்/பக்கவாதம்). விபத்தி னால் ஏற்படும் மருத்துவ செலவுகள்  (உள்நோயாளி செலவுகளுக்கு அதிக பட்சம் ரூ.60 ஆயிரம் வரை/புறநோ யாளி செலவுகளுக்கு அதிகபட்சம் ரூ.30  ஆயிரம் வரை) வழங்கப்படும். விபத்தினால் மரணம்/ஊனம்/பக்கவாதம் ஏற்பட்டவரின் குழந்தை களின் (அதிகபட்சம் 2 குழந்தைகள்) கல்வி செலவுகளுக்கு ரூ.1 லட்சம் வரை, விபத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நாட்களுக்கு, தினப்படி தொகை ஒரு நாளைக்கு ரூ.1000 வீதம் 10 நாட்களுக்கும் (1  நாள் கழிக்கப்படும்), விபத்தில் பாதிக்கப் பட்டவரை பார்க்க பயணிக்கும் குடும்பத் தினரின் பயண செலவுகளுக்கு அதிக பட்சம் ரூ.25 ஆயிரம் வரை, விபத்தி னால் உயிரிழக்க நேரிட்டால், ஈமக்கிரி யைகள் செய்ய ரூ.5000 வரை வழங்கப்படும்.  ஆண்டிற்கு ரூ.399-ல் மேற்கண்ட பல்வேறு பலன்களை வழங்கும் இந்த  குழு விபத்து காப்பீட்டு பாலிசியை ஒரு வர் எடுப்பதன் மூலம், எதிர்பாராமல் நிகழும் விபத்துகளால் ஏற்படும் பாதிப்பு களில் இருந்து, குடும்பத்தின் எதிர்கா லத்தை உறுதி செய்ய முடியும் என்ப தால், பொதுமக்கள் அனைவரும் அருகில் உள்ள அஞ்சலகங்கள், தபால்கா ரர்கள் மூலம் இந்த திட்டத்தில் இணைந்து  பயன்பெற” கேட்டுக் கொண்டுள்ளார்.

;