தஞ்சாவூர், பிப்.1 - தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறை யின் கீழ் இயங்கி வரும், இந்தியப் பெருங்கடல் ஆய்வு மையம் ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் ஆசிரி யர்களுக்கான, இணைய வழி யிலான அடிப்படை இந்திய வரலாற்றுக்கான செவ்வி யக் கிரேக்க மொழிப் பயிற்சி வகுப்பைத் தொடங்கியுள்ளது. இந்தியாவின் பல்வேறு பகுதியிலிருந்தும் மாணவர் கள் இதில் சேர்ந்துள்ளனர். ரோம் பல்கலைக்கழகத்தின் பேரா. முனைவர் ஃபெட ரிக்கோ டே ரோமனிஸ் இப்ப யிற்சி வகுப்பப் பயிற்றுவிக்கும் ஆசிரியராக உள்ளார். கடந்த சனிக்கிழமை இணைய வழியாக நடை பெற்ற தொடக்க விழாவில் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் வி.திருவள்ளுவன் இப்ப யிற்சி வகுப்பினை தொடங்கி வைத்து உறையாற்றினார். அப்போது அவர் பேசு கையில், “வரலாற்றுக்கு முந்தய காலத்திலிருந்தே இந்திய பெருங்கடல் பண் பாட்டு மையமாக இருந்துள் ளது. இதற்கு ஒரு சுவார சியமான வரலாறும் உள்ளது. பழங்காலத்திலிருந்தே மக்க ளும், அவர்களின் கருத்துகள் மற்றும் பொருட்கள் இப்பெருங்கடலை கடந்து உள்ளன.
இந்தியப் பெருங்கடலின் வரலாற்றைப் புரிந்து கொள் வதற்கு பல்வேறு மொழி களில் உள்ள முதன்மையான சான்றுகளை நுண்ணாய்வு செய்து படிக்க வேண்டும். பன்மொழித்திறன் இல்லா மையால், மாணவர்களும் ஆராய்ச்சியாளர்களும் முதன்மை சான்றுகளை பகுப் பாய்வு செய்ய இயல வில்லை. இதன் காரணமாக இந்தியப் பெருங்கடல் ஆய்வு மையம் பல திறன் மேம்பாட்டு திட்டங்களை மாணவர்களுக்காகவும், ஆய்வாளர்களுக்காகவும் செயல்படுத்த உள்ளது” என்றார். பேரா.முனைவர் ஃபெட ரிக்கோ டி ரோமனிஸ் பேசு கையில், “உலகம் முழுவதும் உள்ள தேசியப் பல்கலைக் கழகங்கள் அந்தந்த நாட்டு மரபுகளைப் படிப்பதை ஊக்கு விக்கிறன. பண்பாட்டுத் தொ டர்புகள் பெருகி வரும் தற்கா லத்தில் நாட்டுப் பார்வையை யும் உலகலாவிய கண்ணோ ட்டத்தையும் சமநிலைப் படு த்தப்பட்ட நிலையில் பார்க்க வேண்டும்” என்றார். இந்நிகழ்வில், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பதிவா ளர் க.சங்கர், சுவடிப்புலத் தலைவர் த.கண்ணன், இந்தி யப் பெருங்கடல் ஆய்வு மையத்தின் ஒருங்கிணைப் பாளர் முனைவர் வீ.செல்வக் குமார் மற்றும் கடல்சார் வர லாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறையின் கௌ ரவ உதவிப் பேராசிரியர்கள் முனைவர் அ.சங்கர், முனை வர் செ.கௌரிசங்கர் ஆகி யோர் பங்கேற்றனர்.