பாபநாசம், மார்ச் 10- தஞ்சாவூர் மாவட்டம் திரு வையாறு வட்டார வேளாண் மை விரிவாக்க மையத்தில் மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிக ளுக்கு 50 சதவீத மானி யத்தில் பண்ணைக் கருவி கள், தார்ப்பாய், ஸ்பிரேயர், உளுந்து விதைகள் வழங் கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தஞ்சை மாவட்ட ஆட்சியரக நேர்முக உதவி யாளர் கோமதிதங்கம் கலந்துகொண்டு விவசாயி களுக்கு 50 சதவீத மானி யத்தை பண்ணை கருவி களை வழங்கினார். வேளாண்மை உதவி இயக் குநர் சுஜாதா, கிடங்கு கண்கா ணிப்பாளர் நித்தியா, உதவி வேளாண் அலுவலர்கள் வெங்கடேசன், ஐஸ்வர்யா, அட்மா மேலாளர் ஜெய பிரபா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.