districts

img

குடியிருப்புப் பகுதிகளில் மதுக்கடை திறக்கக் கூடாது! மாதர் சங்கம் வலியுறுத்தல்

தஞ்சாவூர், ஜூன் 10-  அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் தஞ்சை சாந்தப்பிள்ளை கேட், கல்லணைக் கால்வாய் மேல்கரை கிளை சார்பில் கொடியேற்று விழா மற்றும் தெருமுனை பொதுக்கூட்டம் நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு, கிளைத் தலைவர் அம்பிகா தலைமை வகித்தார் கிளைச் செயலாளர் எஸ்.சரஸ்வதி, கிளைப் பொருளாளர் எஸ்.ஜெயந்தி முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் எஸ்.தமிழ்செல்வி கொடியேற்றி வைத்துப் பேசினார். பெண்களுக்கும் குடியிருப்போருக்கும் இடையூறாக, தஞ்சை மாநகரில் குடியிருப்புக்கு மத்தியில் புதிய மதுபானக் கடைகளை திறக்கக் கூடாது. புது ஆற்றின் இரு கரைகளிலும் மது அருந்திக் கொண்டிருப்பவர்களால், பெண்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் அச்சத்துடன் வாழும் மோசமான சூழல் நிலவுகிறது. இதை உடனே சரி செய்திட வேண்டும். மின்விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும். கண்காணிப்பு கேமரா அமைத்து குற்றச்செயல்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.  மாதர் சங்க முன்னாள் மாவட்டச் செயலாளர் எம்.மாலதி, மாநகரச் செயலாளர் இ.வசந்தி, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.