districts

img

பிள்ளையார்பட்டியில் நெல் சேமிப்பு கிடங்கு கட்டும் பணி

தஞ்சாவூர், நவ.10-  தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார் பட்டி ஊராட்சியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக நெல் சேமிப்பு  கிடங்கில் கான்கிரீட் தளத்துடன் கூடிய கூரை  கட்டப்பட்டு வருகிறது. இதனை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் புதனன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாயிகள் பயிரிடும் நெல், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் கொள்முதல் செய்யப்பட்டு நெல் சேமிப்பு கிடங்கில் வைத்து பாதுகாக்கப்படுகிறது.  பெரும்பாலான இடங்களில் கூரை யுடன் கூடிய கொள்முதல் மையம் இல்லாத தால் விவசாயிகளிடம் கொள்முதல் செய்த  நெல்லை பாதுகாக்க இடமின்றி திறந்த வெளியில் அடுக்கி வைக்கின்றனர். இதை தவிர்க்க திறந்த வெளி சேமிப்பு மையங்களில் கட்டாயம் கான்கிரீட் தளத்து டன் கூடிய கூரை அமைப்பது அவசியம் என விவசாய சங்கங்கள் தொடர்ந்து வலி யுறுத்தி வந்தன. இந்நிலையில், நெல்லை பாதுகாக்க கான்கிரீட் தளத்துடன் கூடிய கூரை கட்ட  ரூ.35.205 கோடியில் தஞ்சாவூர் அருகே  பிள்ளையார்ப்பட்டி மற்றும் சென்னம்பட்டி யில் 50,000 மெ.டன் மற்றும் 2,500 மெ.டன்,  மேலும், பட்டுக்கோட்டை தாலுகா திட்டக் குடியில் 6,000 மெ.டன் என மொத்தமாக 58,500 மெ.டன் கொள்ளளவு அமைக்கும் கட்டுமான பணிகள் தொடங்கியுள்ளன. இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் நா.உமாமகேஸ்வரி உட னிருந்தனர்.