districts

ஒரத்தநாடு ஒன்றியத்தில் சாலைப் பணியை முழுமைப்படுத்த வலியுறுத்தி நாளை சாலை மறியல்

தஞ்சாவூர், ஜன. 29 - தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு ஒன்றியம், ஒக்க நாடு கீழையூர், ஒக்கநாடு மேலையூர், யாதவர் தெரு, குளமங்கலம் வரையிலும் 1 ஆம் எண் வாய்க்காலின், ஒரு பக்க கரையில், தார்ச் சாலை அமைப்பதாகச் சொல்லி, கடந்த ஏழு மாத  காலத்திற்கு மேலாக வெறு மனே கப்பியை மட்டும் பரப்பி  சென்றுவிட்டனர்.  இதனால் இப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளின் போக்குவரத்து முற்றிலு மாக முடங்கி கிடக்கிறது. சம்மந்தப்பட்ட அதிகாரிகளி டம் கோரிக்கை விடுத்தும், அரசு நிர்வாகம் கண்டு கொள்ளாமல் அலட்சியப்ப டுத்தி வருகிறது. எனவே,  சாலைப் பணியை உடனடி யாக முழுமைப்படுத்த வலியு றுத்தி, ஒக்கநாடு கீழையூர் சாவடி அருகில் ஜன.31 (திங்கள்கிழமை) காலை 10  மணியளவில் மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. இதில், ஒக்கநாடு கீழை யூர், ஒக்கநாடு மேலையூர், குலமங்கலம், காவரப்பட்டு, கீழவன்னிப்பட்டு, நெய்வா சல் உள்ளிட்ட பகுதிகளின் விவசாயிகள், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்க உள்ளனர்.