தஞ்சாவூர், நவ.4 - தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவா சத்திரம் ஒன்றியம் ரெட்டவயல் கிரா மத்தை சேர்ந்தவர் கண்ணையா - செல்வி தம்பதி. இவர்களின் மூத்த மகள் பாண்டிமீனா (20) நர்சிங் படித் துள்ளார். இரண்டாவது மகள் பாண் டீஸ்வரி மூளை நரம்பியல் பிரச்சனை உடைய மாற்றுத்திறனாளி. இந்நிலையில், கண்ணையா கடந்த ஆண்டு நுரையீரல் நோயால் பாதிக்கப் பட்டு உயிரிழந்தார். செல்வி கடந்த ஜூன் மாதம் கிட்னி பாதிப்பால் உயிரிழந்தார். இதற்கிடையில், சேதமடைந்த வீட்டில் ஆதரவற்ற நிலையில் பாண்டிமீனா, தனது தங்கை பாண்டீஸ்வரியுடன் வசித்து வந்தார். இதுகுறித்து பாண்டிமீனா ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் நேரடி யாகவும், வீட்டின் நிலைமை குறித்து அவரது எண்ணிற்கு வாட்ஸ் அப்பிலும் தகவல் அனுப்பியிருந்தார். இதைப் பார்த்த ஆட்சியர் நேரடியாக பாண்டி மீனாவின் வீட்டிற்கு வந்து பார்வை யிட்டு,
பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 2.40 லட்சம் ரூபாயையும், தன் விருப்ப நிதியில் இருந்து 1.50 லட்சமும் முதற்கட்டமாக வழங்கினார். பின்னர், தன்னார்வலர்களை இணைத்து வீட்டை முழுமையாக கட்ட வேண்டும் என திட்டமிட்டதையடுத்து, லயன்ஸ் நிர்வாகி ஏ.சி.சி.ராஜா நிதியுத வியுடன், பேராவூரணி லயன்ஸ் சங்கம் சுமார் 1.50 லட்சம் ரூபாயும் என சுமார் ரூ.6 லட்சம் மதிப்பில் வீட்டை முழுமையாக கட்டி ஆட்சியரிடம் வழங்கினர். இதையடுத்து, வெள்ளிக்கிழமை பாண்டிமீனா வீட்டிற்கு வந்த ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், புதிய வீட்டை பாண்டிமீனாவிடம் ஒப்படைத் தார். மேலும், பாண்டிமீனாவுக்கும் அவ ரது தங்கைக்கும் புத்தாடைகளை வழங்கினார். மாணவனுக்கு வீடு இதேபோன்று, பேராவூரணி ஒன்றி யம் களத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சகோ தரர்கள் சந்தோஷ்குமார் (21) - விஷ்ணு வர்தன் (17). இவரது பெற்றோர் கருணா நிதி - சரளா உயிரிழந்த நிலையில், பாட்டி ரேணுகா (65) கூலி வேலை செய்து பேரன் களை கவனித்து வந்தார். ரேணுகாவின் குடிசை வீடு சில ஆண்டுகளுக்கு முன்பு இடிந்து விட்டது. ரேணுகா கூலி வேலை செய்து கிடைக்கும் வருமானம் பேரன்களைப் படிக்க வைப்பதற்கும், சாப்பாட்டுக் குமே போதுமானதாக இல்லை.இத னால் அந்த வீடும் இருந்த சுவடே தெரி யாத அளவுக்குக் மாறியது. இந்நிலை யில் சகோதரர்கள் இருவரும், வீடு கேட்டு ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்த னர். இதுகுறித்த செய்தி சில மாதங்க ளுக்கு முன்பு தீக்கதிர் நாளிதழில் வெளி யானது. அதை தொடர்ந்து, அவர்களுக்கு முதல்வரின் பசுமை வீடு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்தும், தனது விருப்ப நிதி மற்றும் தன்னார்வலர் களின் பங்களிப்போடு சுமார் ரூ.5 லட்சத்தில் வீடு ஒன்று கட்டி முடிக்கப்பட் டது. இந்த வீட்டை ஆட்சியர் வெள்ளிக் கிழமை விஷ்ணுவர்தனிடம் ஒப்படைத் தார்.