districts

நோய் பாதிப்பு: கணவன், மனைவி தற்கொலை முயற்சி: கணவர் பலி

தஞ்சாவூர், மார்ச் 18-  தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே கணவன் சர்க்கரை நோயால் பாதிக்க ப்பட்டதால், விரக்தியில் கணவன் மனைவி இருவரும் தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்தனர். இதில் கணவன் உயிரி ழந்தார். மனைவிக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. திருவையாறு அடுத்த காருகுடி பிரதான சாலையைச் சேர்ந்த சந்தானம் (40)  இவருக்கு திருமணமாகி கற்பகம் (31) என்ற மனைவியும், ஈஸ்வரி (15) என்ற மகளும், முகேஷ்(13) என்ற மகனும் உள்ளனர். சந்தானம் சர்க்கரை நோயால் கடந்த இரண்டா ண்டுகளாக அவதிப்பட்டுவந்தார். இடது கால் விரல் அகற்றப்பட்ட நிலையில் காயம் ஆறாமல், கால் முட்டிவரை அழுகியதால், தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டு வந்தார். கணவன் உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில், மனைவி கற்பகமும் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் மனம் வெறுத்த சந்தானமும், அவர் மனைவி கற்பகமும் சனிக்கிழமை மதியம் ஒரே சேலையில் தூக்கு மாட்டிக் கொண்டனர். இதைப் பார்த்த அவரது மகள் ஈஸ்வரி சத்தம் போடவே அருகி  லுள்ளவர்கள் இரண்டு பேரையும் மீட்டு திருவையாறு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுனர். அங்கு சந்தானம் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரி வித்தனர். கற்பகத்துக்கு முதலுதவி சிகிச்சை  அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தஞ்சா வூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.