districts

மின் சிக்கனத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு மனித சங்கிலி

கும்பகோணம், டிச.20- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழ கம் தஞ்சை மின் பகிர்மான வட்டம் சார்பில் மின்சார சேமிப்பு வார விழா நடைபெற்றது. கும்ப கோணம் எம்எல்ஏ அன்பழகன் தலைமை யேற்று மின் சிக்கனத்தை வலியுறுத்தி நடை பெற்ற விழிப்புணர்வு மனித சங்கிலியை தொடங்கி வைத்தார்.  மாநகராட்சி துணை மேயர் சு.ப.தமிழழகன், கும்பகோணம் ஒன்றிய தலைவர் காயத்ரி அசோக்குமார், திருவிடைமருதூர் ஒன்றிய தலைவர் சுபா திருநாவுக்கரசு, டிஎஸ்பி அசோ கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த மனித சங்கிலி ஊர்வலம் கும்பகோணம் செயற்  பொறியாளர் அலுவலக வாயிலில் இருந்து தொடங்கி, நால் ரோடு வரை சென்றது. ஊர்வ லத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மின் ஊழியர்கள் பங்கேற்றனர். மாமன்ற உறுப்பினர்கள் மனோ கரன், அனந்தராமன், உதவி செயற்பொறியா ளர்கள், மின்சார ஊழியர்கள் மத்திய அமைப்பு சங்க பொறுப்பாளர்கள், தொமுச ஊழியர்கள் கலந்து கொண்டனர்.