தஞ்சாவூர், ஜூலை4 - பல்கலைக்கழக மானியக் குழு நிர்ணயித்தவாறு ரூ. 50 ஆயிரம் சம்பளமாக வழங்க வேண்டும். அரசாணை 56 ஐ அமல்படுத்த வே ண்டும். பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும். பல ஆண்டுகளாக பணி புரியும் கௌரவ விரிவுரையாளர்க ளை பணி நிரந்தரம் செய்ய வேண் டும் என்று வலியுறுத்தி அரசுக் கல்லூரி கௌரவ விரிவுரையா ளர்கள் சார்பில், பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முன்பாக வாயில் முழக்கப் போ ராட்டம் வியாழக்கிழமையன்று நடை பெற்றது. இந்தப் போராட்டத்திற்கு கௌரவ விரிவுரையாளர்கள் சங்கத் தலைவர் சு.நித்தியசேகர் தலைமை வகித்தார். செயலாளர் வினோத், பொருளாளர் எஸ்.ஜமுனா ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.