districts

img

விழிப்புணர்வு பேரணி

கும்பகோணம், மார்ச் 1-  தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் உட்கோட்ட காவல்துறை, கும்பகோணம் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, குடந்தை ரத்ததான டிரஸ்ட் இணைந்து பொது மக்கள் தலைக் கவசம் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டிச் செல்ல வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடை பெற்றது. பேரணிக்கு திருவிடைமருதூர் காவல்துறை துணை  கண்காணிப்பாளர் ஜாபர் சித்திக், கும்பகோணம் ரெட் கிராஸ் சொசைட்டி துணை தலைவர் ரோசாரியோ, குடந்தை ரத்ததான டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் ஷேக்  தாவூத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கும்பகோணம் வருவாய் கோட்ட அலுவலர் பூர்ணிமா துவக்கி வைத்தார். விழிப்புணர்வு பேரணியில் பொதுமக்கள் தன்னார் வலர்கள் ரோட்டரி மற்றும் லயன்ஸ் சங்கத்தினர் தனது  இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து விழிப்பு ணர்வை ஏற்படுத்தினர்.

;