தஞ்சாவூர், செப்.26 - தஞ்சாவூர் மாவட்டத்தில் ஞாயி றன்று இரவு கொட்டித் தீர்த்த கனமழையால் அறுவடைக்கு தயா ரான சுமார் 2 ஆயிரம் ஏக்கர் குறுவை நெற்கதிர்கள் நீரில் மூழ்கி யுள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில் ஞாயிறு நள்ளிரவு இடி மின்னலு டன் கூடிய கனமழை சுமார் 4 மணி நேரம் பெய்தது. இந்த மழையின் காரணமாக அதிகபட்சமாக பூதலூ ரில் 167 மி.மீட்டர் மழை பதிவானது. தஞ்சாவூர், பூதலூர், ஒரத்த நாடு, பாபநாசம் ஆகிய வட்டாரங் களில் தற்போது குறுவை நெல் அறுவடை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த மழை யினால் விவசாயிகள் பெரும் பாதிப்பை எதிர்கொள்ள நேரிட்டுள் ளது. குறிப்பாக வல்லம், ஆலக் குடி, புதுகல்விராயன்பேட்டை, கரம்பை ஆகிய பகுதிகளில் அறு வடைக்கு தயாரான நிலையில் நெற் கதிர்கள் தண்ணீரில் மூழ்கின. புதுகல்விராயன்பேட்டையில் க.ரவிச்சந்திரன் என்பவரது வய லில் அறுவடை செய்வதற்காக, அறுவடை இயந்திரத்தை வயலில் ஞாயிறன்று மாலை நிறுத்தி வைத்தி ருந்தனர். ஆனால் இரவு பெய்த மழையால் ரவிச்சந்திரனின் வயல் முழுவதும் தண்ணீர் தேங்கி நெற் கதிர்கள் நீரில் மூழ்கின. சுமார் இரண்டடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கியதால் அறுவடை செய்ய முடியவில்லை. அறுவை நெல் இயந்திரமும் சேறு கதியில் சிக்கி கொண்ட நிலையில், கடும் சிர மத்துக்கு பின்னர் இயந்திரம் வெளியே எடுக்கப்பட்டது.
100 ஏக்கர் நாற்றங்கால் சேதம்
தஞ்சாவூர், பூதலூர் வட்டாரங் களில் பெய்த கனமழையால் சம்பா சாகுபடிக்காக வயலில் விடப்பட் டிருந்த சுமார் 100 ஏக்கர் பரப்பள விலான நெற் பயிர் நாற்றங்கால் மழை நீரில் மூழ்கியுள்ளது. அதே போல் கல்விராயன்பேட்டை பகுதி யில் 50 ஏக்கரில் நேரடி நெல் விதைப்பு செய்திருந்த நிலையில், இளம் பயிர்கள் மழைநீரில் மூழ்கி யுள்ளன. மழைநீரை வடியவைக்கும் பணியில் விவசாயிகள் ஆங்காங்கே ஈடுபட்டுள்ளனர்.
தற்காலிக பாலம் சேதம்
தஞ்சாவூர் அருகே வல்லம் - ஆலக்குடி இடையே பேய்வாரி காட்டு வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் மீது உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலை யில் திங்கள்கிழமை பாலத்துக்கு கான்கிரிட் பணிகள் நடைபெற இருந்த நிலையில், கொட்டித் தீர்த்த கனமழையாலும், வாய்க்காலில் வந்த மழைநீரினாலும் பணிகள் பாதிக்கப்பட்டன. பாலப் பணி களுக்காக அங்கே நிறுத்தப்பட்டி ருந்த ஜெனரேட்டர் இயந்திரங் களும் மழைநீரால் சூழ்ந்த நிலை யில், அவற்றை எடுக்க முடியாமல் பொக்லைன் இயந்திரம் மூலம் வெளியே எடுக்கப்பட்டது. பாலப் பணிகள் நடைபெறு வதால் பொதுமக்களுக்காக பாலத் தின் அருகே தற்காலிக தரைபாலம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த பாலம் மழைநீர் மற்றும் வாய்க்கால் நீரில் மூழ்கியதால் பொதுமக்கள் அவ்வழியில் செல்ல அனுமதிக் கப்படவில்லை.
நெல் மூட்டைகள் சேதம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல் படும் பல நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்கள் குவியல் குவியலாக குவித்து வைக்கப்பட்டு உள்ளன. ஞாயிறு இரவு கொட்டித் தீர்த்த மழையால் ஈரப்பதம் அதி கரித்துள்ளதால், கொள்முதல் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் திங்கள்கிழமை பெரும் பாலான இடங்களில் கொள்முதல் பணிகள் நடைபெறவில்லை. கல்விராயன்பேட்டையில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட 300 மூட்டை நெல் போதிய பாதுகாப்பு இல்லாமல் வைக்கப்பட்டுள்ளது. இரவு பெய்த மழையினால் நெல் மூட்டைகள் சேதமாகியுள்ளன. கொள்முதல் நிலையங்களில் நெல் அதிகமாக இருப்பதால் கொள் முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து வேளாண்மைத் துறை அதிகாரிகள் கூறுகையில், எதிர்பாராதவிதமாக பெய்த மழை யினால் குறுவை நெல் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பாதிக்கப்பட்டிருக்கலாம். அதே போல் சம்பா நாற்றங்காலில் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த மழை பாதிப்புகள் குறித்து கணக் கெடுப்பு நடத்தப்படுகிறது என்ற னர்.