districts

சிறப்பான வரவேற்பை பெற்ற தீபாவளி சிறப்பு ரயில்கள் தினசரி ரயில்களை இயக்க கோரிக்கை

 பட்டுக்கோட்டை, டிச.14-  தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் சார்  பில் திருவாரூர் - பட்டுக்கோட்டை - காரைக்  குடி அகல ரயில் பாதையில் தீபாவளி,  பொங்கல் பண்டிகைக்கும், மேல்மருவத் தூர் ஆதிபராசக்தி ஆலய தைப்பூச விழா விற்கும் சிறப்பு ரயில்களை இயக்க வேண் டும் என தொடர்ந்து கோரிக்கை வைக்கப்படு கிறது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு தென்னக ரயில்வே சார்பில் அக்டோபர் 23 இரவு சென்னை சென்ட்ரலில் இருந்து  எழும்பூர், தாம்பரம், விழுப்புரம், மயி லாடுதுறை, திருவாரூர், பட்டுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, சிவகங்கை,  இராமநாதபுரம் வழியாக இராமேஸ்வ ரத்திற்கு (வண்டி எண்: 06041) சிறப்பு விரைவு ரயில் இயக்கப்பட்டது. இதன் மூலம் ரூ.4,59,498 வருவாய் கிடைத்துள்ளது. மறுமார்க்கத்தில் தீபாவளி அன்று  அக்டோபர் 24-ஆம் தேதி இராமேஸ்வரத்தி லிருந்து தாம்பரத்திற்கு சிறப்பு விரைவு ரயில் இயக்கப்பட்டது. (வண்டி எண் 06042) இதன் மூலம் 6,70,275 ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இந்த சிறப்பு ரயில் தீபாவளிக்கு இரண்டு நாட்கள் முன்னதாக அறிவிக்கப்பட்டாலும் இப்பகுதி மக்களிடையே பெரும் வர வேற்பை பெற்றது.  இந்நிலையில், இந்த சிறப்பு ரயிலை வட மாநில பயணிகள் மற்றும் தமிழக பயணிகள் நலனுக்காக தினசரி இரவு விரைவு ரயி லாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தி லிருந்து எழும்பூர், விழுப்புரம், மயிலாடு துறை, திருவாரூர், பட்டுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, சிவகங்கை வழியாக இராமேஸ்வரத்திற்கு இரு முனைகளிலிருந்தும் இயக்க வேண்டும்.  இதனால், 16 வருடங்களாக ரயில் சேவை இல்லாமல் இருக்கும் திருவாரூர் - பட்டுக்கோட்டை - காரைக்குடி அகல ரயில்  பாதை பயணிகள் பயன் பெறுவர் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிறப்பு ரயில் சேவைகள்  மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலய தைப்பூச விழாவிற்கு காரைக்குடியில் இருந்து மேல்மருவத்தூருக்கும், பொங்கல் பண்டிகைக்கு சென்னை எழும்பூரில் இருந்து இராமேஸ்வரத்திற்கும் சிறப்பு  ரயில்களை இயக்கவும், பயணிகள் அதிக அளவில் இந்த சிறப்பு ரயில்களை பயன் படுத்திக் கொள்ள ஏதுவாக, பண்டிகைக்கு சில வாரங்களுக்கு முன்னதாகவே தென்  னக ரயில்வே அறிவிப்பு செய்ய வேண்டும் எனவும் பட்டுக்கோட்டை வட்ட ரயில் பய ணிகள் நலச் சங்கத்தின் தலைவர் என். ஜெயராமன், செயலாளர் வ.விவேகா னந்தம், துணைச் செயலாளர் மு.கலிய பெருமாள் ஆகியோர் தென்னக ரயில்வே பொது மேலாளர், திருச்சி கோட்ட ரயில்வே  மேலாளர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.