districts

கூட்டு சாகுபடிக்கு அரசு நிலம் ஒதுக்கித் தரவேண்டும் விவசாயத் தொழிலாளர்கள் கோரிக்கை

தஞ்சாவூர், டிச.6-  அகில இந்திய விவசா யத் தொழிலாளர்கள் சங்கத் தின் திருவையாறு ஒன்றிய  மாநாடு வரகூரில் நடைபெற் றது.  மாநாட்டை மாவட்டப்  பொருளாளர் கே.அபி மன்னன் தொடங்கி வைத் தார். சிபிஎம் ஒன்றியச் செய லாளர் ஏ.ராஜா, விவசாயி கள் சங்க மாவட்டப் பொரு ளாளர் எம்.பழனி அய்யா, ஒன்றியச் செயலாளர் எம்.ராம், விவசாயத் தொழிலா ளர்கள் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.வாசு நிறை வுரையாற்றினார்.  தலைவராக பி.பாபு, செயலாளராக ஆர்.பிரதீப் ராஜ்குமார், பொருளாளராக கே.மதியழகன் உள்ளிட்ட 11 பேர் கொண்ட ஒன்றியக் குழு அமைக்கப்பட்டது 100 நாள் வேலையை விவசாயப் பணிகளுக்கும் விரிவுபடுத்தி ஊதியம் ரூ. 600 வழங்கிட வேண்டும். விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வா தாரத்தை காக்கும் வகையில்  100 நாள் வேலையை 200 நாட்களாக அதிகப்படுத்த வேண்டும். இயந்திரங்களின் வருகையால் வேலை யிழக்கும் விவசாய தொழி லாளர்களுக்கு நிவாரண மாக மாதம் ரூ.3000 வழங்க  வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப் பட்டன.