districts

img

தமிழ்நாடு 2 ஆம் நிலைக் காவலர் பணிக்கு தமிழ்ப் பல்கலை. மாணவர்கள் 12 பேர் தேர்வு

தஞ்சாவூர், மார்ச் 13 - தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் பன்னிரண்டு மாணவர்கள் தமிழ்நாடு இரண்டாம் நிலை காவலர் பணிக்குத் தேர்வு  பெற்றுள்ளனர். தமிழ்நாடு அளவில் இரண்டாம் நிலைக் காவல் பணிக்கான தேர்வு அண்மையில் நடை பெற்றது. அத்தேர்வில் தமிழ்ப் பல்கலைக்கழ கத்தில் பல்வேறு துறைகளில் பயின்று வரும்  ஒருங்கிணைந்தப் பட்டப்படிப்பு வகுப்பைச்  சேர்ந்த 12 மாணவர்கள் விளையாட்டு ஒதுக்கீடு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு பெற்ற மாணவர்கள் தமிழ்ப் பல்கலைக் கழக துணைவேந்தர் முனைவர் வீ.திருவள்ளு வனை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். தேர்வு செய்யப்பட்ட இரண்டாம் நிலைக்  காவலர்கள் அனைவரும் மார்ச் 14 (திங்கள்) அன்று பணியில் இணையவுள்ளனர். இந்நிகழ் வில் தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிவாளர் (பொ) முனைவர் க.சங்கர், உடற்கல்வி ஆசிரியர்  செ.பிரபாகரன் ஆகியோர் பங்கேற்றனர்.

;