தஞ்சாவூர், பிப்.5- மழையால் பாதிக்கப்பட்டுள்ள நெல் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப் பீடு வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத் துள்ளது. இதுதொடர்பாக சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார், மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: ‘‘எதிர்பாராத பலத்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயப் பகுதிகளில் துயர் துடைக்க உடனடியாக தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் மற்றும் அதி காரிகள் நம்பிக்கை தரும் வகையில் வருகை புரிந்ததை வரவேற்கிறோம். முற்றிலும் அழிந்து போய் உள்ள நெல் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடாக தமிழ்நாடு அரசு வழங்கிட வேண்டும். மேலும், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயி களால் கொண்டு வந்து வைக்கப்பட்டுள்ள நெல்லை பாதுகாக்க தார்ப்பாய்களை வழங்க நடவடிக்கை எடுத்திட வேண்டும். தொடர்மழை மற்றும் மேகமூட்டத் தால் ஈரப்பதம் மிகுந்து காணப்படுவ தால் ஈரப்பதத் தளர்வு செய்து நெல் கொள் முதல் செய்திட வேண்டும். மழையால் ஏற்பட்டுள்ள நெற்பயிர் பாதிப்புகளுக்கும், நேரடி கொள்முதல் நிலையங்களில் முளைத்து சேதமடைந்துள்ள நெல்லை யும் கருத்தில் கொண்டு பயிர்க் காப்பீடு இழப்பீடு கிடைக்க நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும். அறுவடை இயந்திரங்களை பிற பகு திகளிலிருந்து வரவழைத்து தட்டுப்பாடு மற்றும் அபரிமிதமான வாடகை உயர்வை தடுக்கும் வகையில் உரிய நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.