தஞ்சாவூர், ஜன.23- தமிழக மீனவர்களின் வாரிசுகளின் வாழ் வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்கள் இந்திய கடலோரக் காவல் படை மற்றும் இந்திய கப்பல் படையில், பொது மற்றும் மாலுமி பணிகளிலும், இதர தேசிய பாது காப்புப் பணிகளிலும் சேருவதற்கு ஏதுவாக இலவச சிறப்பு பயிற்சி வகுப்புகள் தமிழ் நாடு கடலோர பாதுகாப்பு குழுமத்தின் மூலம் நடத்தப்படும் என தமிழ்நாடு முதல மைச்சர் காவல்துறை மானியக் கோரிக்கை விவாதத்தின் போது அறிவித்தார். இதன்படி முதல் அணிக்கான 90 நாட்கள் இலவச பயிற்சி வகுப்புகள் முடிவடைந்த நிலையில், இரண்டாவது அணிக்கான 90 நாட்கள் இலவச பயிற்சி வகுப்பு, பிப்ரவரி மாதம் பிற்பகுதியில் துவக்கப்படவுள்ளது. அதன்படி கடலோர பாதுகாப்பு குழுமத்தால் நடத்தப்படவுள்ள இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள தகுதியுள்ள மீனவர் வாரிசு களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற் கப்படுகின்றன. விண்ணப்ப படிவங்களை சம்பந்தப் பட்ட கடலோர மாவட்ட மீன்வளத்துறை அலுவலகங்களிலிருந்தும், கடலோர பாது காப்பு குழும ஆய்வாளர் அலுவலகங்க ளிலிருந்தும், மீனவ கிராம கூட்டுறவு சங்கங் கள், நியாய விலைக் கடைகள் ஆகிய இடங்களிலிருந்தும் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். மேலும், https://drive. google.com/drive/folders/ 118xcdsoXM9RH-O--ySMT2wJCoEXt Wskh?usp=sharing என்ற இணையதள முகவரியிலும் பதிவிறக்கம் செய்து விண் ணப்பிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள் ளது. இப்பயிற்சி வகுப்புகளை கடலூர், இராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய இடங்களில் இலவசமாக நடத்த உத் தேசிக்கப்பட்டுள்ளது. எனவே, 12-ஆம் வகுப்புத் தேர்வில் 50 சதவிகிதத்திற்கு மேலும், கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களில் தனித்தனியாக் 50 சதவிகிதத்திற்கு மேலும் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ள, உரிய உடற் கூறு தகுதிகளும் பெற்றுள்ள மீனவர் வாரிசு கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கடலோரக் காவல்படை கூடு தல் காவல் துணைத் தலைவர் சந்தீப் மிட்டல் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறப் பட்டுள்ளது.