districts

வளரிளம் பருவ வயதினருக்கு ஆரோக்கிய விழிப்புணர்வு பயிற்சி

தஞ்சாவூர், நவ.27 -  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள திருச்சிற்றம்பலத்தில், பொது  சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து  துறை சார்பில் பேராவூரணி வட்டார அளவி லான வளரிளம் பருவ வயதினருக்கான எதிர்கால ஆரோக்கிய விழிப்புணர்வு பயிற்சி  முகாம் நடைபெற்றது.  முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலர்  மரு.வி.செளந்தரராஜன் தலைமை வகித் தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். பேரா வூரணி ஒன்றியத்தில் உள்ள 26 ஊராட்சி களிலும் ஒரு ஊராட்சிக்கு 4 பேர் வீதமும், பேராவூரணி பேரூராட்சி பகுதியில் 4 பேர் கொண்ட 7 குழுவும் அமைக்கப்பட்டு, 132 வளரிளம் பருவ வயதினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.  பயிற்சியில் வளரிளம் பருவ வயதான  11-19 வயதுடைய ஆண், பெண் குழந்தை களுக்கு தேவையான ஆரோக்யம், சுகா தாரம் ஊட்டச்சத்து பற்றியும், மனநல ஆரோக்யம், வாழ்க்கை திறன் வளர்த்தல், தொற்றும் மற்றும் தொற்றா நோய்கள் குறித்த புரிதல், நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் பற்றி அறிதல், போதை பொருட்கள் பயன் படுத்துவது, வன்முறையில் ஈடுபடுவதை தவிர்த்தல், விபத்துகளை தவிர்த்தல், குழந்தைத் திருமணம், கர்ப்ப கால மரணம், சிசு மரணம் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது.  பயிற்சி பெற்றவர்கள் தங்களது பகுதி யில் உள்ள வளரிளம் பருவத்தினரிடம் விழிப் புணர்வை ஏற்படுத்துவார்கள் என்றும், ஒவ்வொரு மாதமும் அந்தந்த பகுதி, கிராம செவிலியர்கள் பயிற்சி பெற்றவர்களுடன், வளரிளம் பருவத்தினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள் என்றும் வட்டார மருத்துவ  அலுவலர் மரு.செளந்தரராஜன் கூறினார்.