மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கும்பகோணம் மாநகர குழு சார்பில் மதுரையில் நடைபெற இருக்கும் சிபிஎம் 23 ஆவது மாநில மாநாட்டையொட்டி 23 செங்கொடிகள் ஏற்றப்பட்டன. தஞ்சை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன் செங்கொடியை ஏற்றினார். மாநகர செயலாளர் செந்தில்குமார், சிஐடியு மாவட்ட பொருளாளர் கண்ணன், சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் சம்மேளனம் மாநில செயலாளர் பார்த்தசாரதி, வாலிபர் சங்க பொறுப்பாளர் ரஞ்சித், அரசு போக்குவரத்து ஊழியர் சங்க பொருளாளர் வெங்கடாஜலபதி, நகர குழு உறுப்பினர் ராஜகோபாலன், மாணவர் சங்க மாவட்ட செயலாளர் பிரபாகரன், மாதர் சங்க மாவட்ட பொறுப்பாளர் தனலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.