தஞ்சாவூர், மார்ச் 11- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பழைய பேருந்து நிலையம் அருகே பேரூராட்சிக்கு சொந்தமான கட்டணக் கழிப்பறை உள்ளது. இதன் வெளியே தென்னங்கீற்றால் கூரை வேயப்பட்டிருந்தது. இந்நிலையில், மாலை 5 மணி வாக்கில் திடீரென கூரை தீப்பற்றி எரிந்தது. தகவலின் பேரில் நிலைய அலுவலர் இரா.ராமசந்தி ரன் தலைமையில் சம்பவ இடத்திற்கு வந்த பேராவூரணி தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயைக் கட்டுப்படுத்தினர்.