districts

போலி மருத்துவர்கள் கைது

கும்பகோணம், ஏப்.10- தஞ்சாவூர் மாவட்டம் நாச்சியார்கோவில் பகுதியில் போலி மருத்துவர்கள் குறித்த புகாரின் பேரில், முருக்கங்குடி கடைவீதி ஸ்ரீ லட்சுமி மெடிக்கல் என்கிற பெயரில் கடை நடத்தி நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்த ராஜூ, இதேபோல் கூகூர் கடைவீதியில் வைஷ்ணவி மெடிக்கல் கடையில் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து வந்த குச்சிபாளையம் குடியானத் தெரு சரவணன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.