பாபநாசம், நவ.1 - தஞ்சாவூர் மாவட்டம் பாப நாசத்தை அடுத்த சுந்தரப் பெரு மாள் கோவில் கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி கிழக்கிற்கு ரூ.5,88,700 லட்சம் மதிப்பீட்டிலும், கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மேற்கிற்கு ரூ.5,07,000 லட்சம் மதிப்பீட்டிலும் மாணவர்கள் பயன்பாட்டிற்கான மேஜை, நாற்காலிகள், குழந்தைகளுக்கான வட்ட வடிவிலான மேஜைகள், நாற் காலிகள், பீரோ, அலுவலக மேஜை, நாற்காலிகளை பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா வழங்கி னார். நிகழ்ச்சியில் கும்பகோணம் மாநகராட்சி மண்டலத் தலைவர் அசோக்குமார், கும்பகோணம் ஊராட்சி ஒன்றியப் பெருந்தலை வர் காயத்ரி அசோக்குமார், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பி னர் அன்பழகன், பள்ளித் தலைமை யாசிரியர் மகாலட்சுமி, பள்ளி மேலாண்மைக் குழுவினர் கலந்து கொண்டனர். இதேபோன்று நாகக்குடியில் கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு ரூ.4,38,300 லட்சம் மதிப்பீட்டிலும், வலையப் பேட்டை ஊராட்சி அம்மாபேட்டை கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு ரூ.3,29, 500 லட்சம் மதிப்பீட்டிலும் உபகர ணங்கள் வழங்கப்பட்டன. இதில் ஒன்றியக் குழு உறுப்பினர் செல் வம், பள்ளி ஆசிரியர்கள், மாண வர்கள் கலந்து கொண்டனர்.