தஞ்சாவூர், ஜூலை 23 - தஞ்சாவூர் மாவட்ட பார்வைத்திறன் குறையுடை யோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளியில் 2022-2023 ஆம் கல்வியாண்டிற்கான 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்பள்ளியில் அரசால் வழங்கப்படும் கல்வி உபகர ணங்கள், சீருடை, காலணி, பிரெய்லி புத்தகங்கள் மற்றும் கணித உபகரணங்கள் போன்றவை இலவசமாகப் பெற்றுத் தரப்படுகிறது. நடைப்பயிற்சி, விளையாட்டுப் போட்டிகள், பேச்சுப் போட்டிகள், நடனம், கராத்தே, யோகா, சிலம்பம், இசை போன்ற இதரக் கலைகள் கற்பிக்கப்படுகின்றன. மாணவர்களுக்கு மாதந்தோறும் மருத்துவப் பரிசோ தனை செய்யப்படுகிறது. இப்பள்ளியின் விடுதியில் மாணவர் கள் பாதுகாப்பாக தங்குவதற்கு இடமும், ஆரோக்கியமான உணவு மற்றும் தூய்மையான குடிநீர் வழங்கப்பட்டு வரு கிறது. தஞ்சாவூர் மாவட்டத்தை சார்ந்த, பார்வைத்திறன் குறையு டைய மாணவர்களுக்கான சிறப்பு மாணவர் சேர்க்கை முகாம் ஜூலை 29 அன்று, தஞ்சாவூர் மேம்பாலம் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளியில் நடை பெறவுள்ளது. எனவே, மாவட்டத்தில் உள்ள பார்வைத்திறன் குறையுடைய மாணவ, மாணவிகளை இப்பள்ளியில் சேர்த்திட முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.