districts

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வாலிபர் சங்கம் வலியுறுத்தல்

குடவாசல், மே 30 -  கொரடாச்சேரி ஒன்றியம் அம்மையப்ப னில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்  வாலிபர் சங்கத்தின் 18 ஆவது ஒன்றிய மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநாட் டிற்கு தலைவர் கே.குபேரன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் எஸ்.எம்.சலா வுதீன் துவக்க உரையாற்றினார். மாவட்டப்  பொருளாளர் ஏ.கே.வேலவன் வரவேற்புரை யாற்றினார். புதிய செயலாளராக எம்.எஸ்.ஜெய்கிஷ், தலைவராக கே.குபேரன், பொருளாளர் எஸ். குறளரசன் மற்றும் துணைத் தலைவர்களாக பாரத், விஜயபாண்டியன், துணை செயலா ளர்களாக மணிசங்கர், ரஞ்சித் உட்பட 13 கொண்ட ஒன்றியக் குழுவை அறிவித்து மாவட்ட செயலாளர் கே.பி.ஜோதிபாசு நிறை வுரையாற்றினார். அரசு துறையில் உள்ள காலிப் பணியி டங்களை முழுமையாக உடனடியாக நிரப்பிட வேண்டும், வேலையின்றி வாடும் இளைஞர்க ளுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். வேலை இல்லாமல் உள்ள இளை ஞர்களுக்கு கால நிவாரணம் அளிப்பதற்கான சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். பெண்க ளுக்கு பணி இடங்களில் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.