தஞ்சாவூர், நவ.9- தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் பள்ளி மற்றும் கல்லூரி யில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் கல்வி உதவித்தொகை வழங்கி வரு கிறது. 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ரூ.1000, 6 ஆம் வகுப்பு முதல் 8 வகுப்பு வரை பயில்வோ ருக்கு ரூ.3000, 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயில்வோருக்கு ரூ.4000, இளங்கலை கல்வி பயில்வோ ருக்கு ரூ.6000 மற்றும் முதுகலை கல்வி பயில்வோருக்கு ரூ.7000 வழங்கப்படு கிறது. பார்வையற்றவர்கள் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று வந்தால் கூடுத லாக ரூ.3000, வாசிப்பாளர் உதவித்தொகை மற்றும் பட்டப்படிப்பு படித்து வந்தால் ரூ.5000, கூடுதலாக வாசிப்பாளர் உதவித் தொகை வழங்கப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் 2022-23 ஆம் கல்வி ஆண்டிற்கு மாற்றுத்திற னாளிகளுக்கான கல்வி உதவித்தொகை மற்றும் பார்வையற்றோருக்கான வாசிப்பா ளர் உதவித்தொகை வழங்க விண்ணப்பம் பெறப்பட்டு வருகிறது. 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாற்றுத்திறனாளி கள் சென்ற ஆண்டு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 9 ஆம் வகுப்புக்கு மேல் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளிகள் சென்ற ஆண்டு இறுதித்தேர்வில் 40 சத வீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். வேறு எந்த துறையிலும் கல்வி உதவித்தொகை பெறாதவராக இருக்க வேண்டும். தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்கள் கல்வி உத வித்தொகை பெற 30.11.2022-க்குள் விண்ணப்பிக்கலாம். மேலும், பார்வை யற்றோர் வாசிப்பாளர் உதவித்தொகை பெற தனியாக ஒரு விண்ணப்பம் சமர்ப் பிக்க வேண்டும். கல்வி உதவித்தொகை விண்ணப்பத்தில் கல்வி பயிலும் நிறு வனத்தில் சான்று பெற்று, மாற்றுத் திற னாளிகளுக்கான அடையாள அட்டை நகல், மதிப்பெண் சான்று, வங்கி கணக்கு பாஸ்புத்தகம் நகல் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இதுகுறித்த விவரங்களை பெற 04362-236791 என்ற தொலை பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். கல்வி உதவித்தொகை விண்ணப்பங் களை 30.11.2022க்குள் மாவட்ட மாற்றுத்திற னாளிகள் நல அலுவலர், மாவட்ட ஆட்சி யர் அலுவலக வளாகம், தஞ்சாவூர் என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாக விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.