districts

img

தூர்வாரும் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் தஞ்சை விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்

தஞ்சாவூர், பிப்.24-  தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் சுகபுத்ரா, வேளாண்மை இணை இயக்குநர் நல்லமுத்துராஜா மற்றும் அனைத்து துறை அதிகாரிகள், விவ சாயிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விவசாயிகள் பேசு கையில், ‘‘டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணி, ஆற்றில் தண்ணீர் திறக்கும்போது அவசர அவசரமாக நடைபெறுவதால் பணிகளில் தரம்  இல்லாமல் போகிறது. எனவே, தூர்வாரும் பணியினை மார்ச் மாதத்திலேயே தொடங்க வேண்டும். விவசாயிகளிடம் தூர்வாரும் பணிகள் தொடர்பாக தற்போதே கருத்துகளை கேட்டு, முன்னுரிமை அடிப்படையில் பணிகள் தொடங்க வேண்டும். தூர்வாரும் பணிகள் முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டத்தை நடத்தி விவசாயிகளின் கருத்துகளை அமைச்சரும், உயர் அதிகாரிகளும் பெற வேண்டும். கோடை சாகுபடிக்கு மும்முனை  மின்சாரம் வழங்க வேண்டும். பகலில் கூடுதல் நேரம் இலவச மின்சா ரம் வழங்க வேண்டும். பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப் பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். அதே போல் விவசாயிகள் செலுத்திய பயிர் காப்பீடுக்கான இழப்பீடுத் தொகையை மாநில அரசு பெற்றுத் தர வேண்டும். கரும்புக்கான சிறப்பு ஊக்கத் தொகையை காலத்தோடு வழங்க வேண்டும். திருமண்டங்குடி சர்க்கரை ஆலையால் பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகளுக்கு தற்போ தும், வங்கியிலிருந்து வரும் நோட்டீஸ்களை நிறுத்தி வைக்க வேண்டும். வல்லத்தில் நீர்நிலைப் புறம்போக்கு இடத்தை ஆக்கிர மித்துள்ள தனியார் கல்லூரி நிர்வா கத்தால், அப்பகுதியில் உள்ள விவ சாயிகள் கரும்பு வெட்ட முடியா மல் பாதிக்கப்பட்டுள்ளனர். உடனடி யாக மாவட்ட ஆட்சியர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என வலியுறுத்தி பேசினர். கூட்டத்தில், விவசாயிகளின் கேள்விகளுக்கு அவ்வப்போது மாவட்ட ஆட்சியர் பதிலளித்து பேசினார்.

தஞ்சாவூர், பழைய ஆட்சியர் அலுவலக அருங்காட்சியகத்தில், பல்வேறு வேளாண் சார்ந்த பழமையான கருவிகள், காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.  அந்த வகையில், பட்டுக்கோட்டை அருகே பொன்னவராயன் கோட்டையை சேர்ந்த விவசாயி வீரசேனன், தான் பயன்படுத்திய நீர் ஏற்றம் இறைக்கும் கருவியான கமலையை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், வேளாண் இணை இயக்குநர் நல்லமுத்து ராஜா ஆகியோரிடம் வழங்கினார்.