தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 1,000 பேருக்கு ரமலானை முன்னிட்டு ரூ.2 ஆயிரம் மதிப்பிலான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு மலேஷியத் தொழிலதிபர் சின் ராவுத்தர் டத்தோ ஷாகுல் ஹமீது சார்பில் வழங்கப்பட்டது. இதில் பெரிய பள்ளி தலைவர் யூசுப் அலி, துணைச் செயலர் சபீர் அகமது, நாசர், கஜ்ஜாலி, கமால் பாட்சா, அப்துல் மாலிக் உள்பட பலர் கலந்துகொண்டனர்.