தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆதரவற்ற முதியவர்களுக்கு திமுக சார்பில் போர்வைகள் வழங்கப்பட்டன. மாவட்ட துணைச் செயலர் துரைமுருகன், பாபநாசம் பேரூர் செயலர் கபிலன், துணைச் செயலர் சின்னஉதயா, சரண் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.