தஞ்சாவூர், ஜன.29- தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, திருக்காட்டுப்பள்ளி, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில், அசோகன் ஆபரண மாளிகை செயல்பட்டு வந்தது. இங்கு நகை சிறுசேமிப்பு திட்டம், மற்ற வங்கிகளில் உள்ள அடமானம் வைத்த நகை களை மீட்டு, வட்டி இல்லா கடன் வழங்கப் படும் போன்ற கவர்ச்சிகரமான விளம்ப ரங்கள் அறிவிக்கப்பட்டது. இதனால், பலர் முதலீடு செய்திருந்தனர். இந்நிலையில், வெள்ளிக்கிழமை ஒரத்த நாடு கிளையில், ஒரு சிலர் அடமானம் வைத்த நகைகளை மீட்க சென்றுள்ளனர். அப்போது, கடையிலுள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் அனைத்தையும் கடை ஊழியர்கள் எடுத்துக்கொண்டு காலி செய்துவிட்டதாக கூறப்படுகிறது. இத்தகவல் அப்பகுதியில் பரவியதை யடுத்து பாதிக்கப்பட்டவர்கள் கடையை முற்றுகையிட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பாதிக்கப்பட்டவர் களிடம் பேசி, புகார் அளிக்க நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து ஒரத்தநாட்டில், பாதிக் கப்பட்ட சுமார் 500க்கும் மேற்பட்டோர், அசோ கன் ஆபரண மாளிகை உரிமையாளர் புகார் அளித்து வருகின்றனர். இதே போல், பட்டுக்கோட்டை, திருக் காட்டுப்பள்ளி, தஞ்சாவூர் பகுதியில் உள்ள அதே நிறுவனத்தின் கடைகள் பூட்டப்பட்ட தால், அந்தந்த பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் புகார் அளிக்க பலரும் குவிந்தனர்.