கும்பகோணம், டிச.15- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஒருங்கி ணைந்த நீதிமன்றத்தில் மூன்று தளங்களில் 10 நீதி மன்றங்கள் இயங்கி வரு கின்றன. இந்நிலையில் தினந்தோ றும் வழக்கு சம்பந்தமாக முதியோர்கள், வழக்கறி ஞர்கள், நீதிபதிகள் மேல் தளத்திற்கு செல்ல லிஃப்ட் வசதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், கடந்த ஆறு மாதங் களாக லிப்ட் வேலை செய்யா மல் உள்ளதாக தகவல் தெரி வித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. மூன்றாவது தளத்திற்கு செல்ல வேண்டிய மாற்றுத் திறனாளி வழக்கறிஞர்கள் செல்ல முடியாத நிலை உள் ளது. எனவே, நீதிமன்ற வாயில் முன்பு அமர்ந்து மாற் றுத்திறனாளி வழக்கறி ஞர்கள் மணி செந்தில், சத்ய ராஜ் ஆகியோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வழக்கறி ஞர் சங்க தலைவர் ராஜ சேகர், பொறுப்பாளர்கள் சங்கர் செந்தில் ஆகியோர் தர்ணாவில் ஈடுபட்ட வழக்க றிஞர்களிடம் பேச்சுவார்த் தையில் ஈடுபட்டனர்.