districts

img

சென்னை முற்றுகை போராட்டத்திற்கு சென்ற மாற்றுத்திறனாளிகள் கைது

கும்பகோணம்,  மார்ச் 22 - மாற்றுத்திறனாளிகளின் நீண்ட நாள் கோரிக்கையான மாதந்தோறும் வழங்கக் கூடிய  உதவித் தொகையை உயர்த்தக் கோரி தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மாற்றுத்திறனாளிக்கு புதுச்சேரி மாநிலத்தில் ரூ.3800, தெலுங்கானாவில் ரூ.3016, ஆந்திராவில் ரூ.3100  வழங்குவது போல் தமிழ கத்திலும் மாற்றுத்திறனா ளிக்கு ரூ.3000, கடும் ஊனமு ற்றோருக்கு ரூ.5000 உதவித் தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை கோட் டையில் குடியேறும் முற்றுகை போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டி ருந்தது. இந்நிலையில், போ ராட்டத்தில் கலந்து கொள்வ தற்காக கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து இரவு 11 மணியளவில் 22 மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் பேருந்தில் சென்னை செல்ல  இருந்தனர். தகவலறிந்த காவல் துறை கும்பகோணம் துணை  கண்காணிப்பாளர் அசோகன் தலைமையில் 50 -க்கும் மேற்பட்ட காவல்துறை யினர், மாற்றுத்திறனாளிகளி டம் ‘நீங்கள் சென்னை போரா ட்டத்தில் கலந்து கொள்ளக்  கூடாது. கலைந்து செல்லுங் கள்’ என பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதை ஏற்றுக்கொள்ளாத மாற்றுத்திறனாளிகள், தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் மாவட்ட துணை தலைவர் சுகுமார் தலைமையில், 22 மாற்றுத்திறனாளிகளும் பேருந்து நிலையத்திலேயே கண்டன முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட வர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் திரு மண மண்டபத்தில் தங்க  வைத்தனர்.

இது சம்பந்தமாக மாற்றுத்திறனாளிகள் கும்ப கோணம் கோட்டாட்சியரிடம் புகார் தெரிவித்தனர். அதன் பேரில் அதிகாலை 5:30  மணிக்கு தனியார் திருமண  மண்டபத்திற்கு வந்த கோட் டாட்சியர் கோரிக்கைகளை அரசுக்கு தெரிவிக்கிறோம் என்றும் தங்களை பாது காப்பாக அனுப்பி வைக்கி றோம் என்றும் உறுதியளித் தார். இருந்தும் சென்னை முற்றுகைப் போராட்டத்தில் கலந்துகொள்வதை தடுத்து  கைது செய்த காவல் துறையை கண்டித்தும் மாற்றுத்திறனாளிகளின் கோரி க்கையை வலியுறுத்தியும் கும்பகோணம் கோட்டாட்சி யர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் மாவட்ட செயலாளர் இளங்கோவன், சங்க பொறுப் பாளர்கள் அன்புமணி, ஜீவ பாரதி, ஜெயபாரதி உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.