districts

img

தஞ்சை மாவட்டத்துக்கு பயிர்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கியதில் பாரபட்சம் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கடும் குற்றச்சாட்டு

தஞ்சாவூர், அக்.28-  தஞ்சாவூர் மாவட்டத்துக்கு பயிர்க் காப்பீடு இழப்பீடு தொகை குறைந்த அளவிலேயே வழங்கப்பட்டது குறித்து,  விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத் தில் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் அலுவ லர் அளித்த பதிலால் விவசாயிகள் அதிருப்தி அடைந்தனர். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் வெள்ளிக்கிழமை விவசாயி கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடை பெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சி யர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார். கூடுதல் ஆட்சியர் ஓ.என்.சுகபுத்ரா, மாவட்ட வேளாண் இணை இயக்குநர் ஏ.ஜஸ்டின் உள்ளிட்ட  அரசு அதிகாரிகளும், விவசாயிகளும் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியதும் விவசாயி கள், தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த  சம்பா பருவத்தில் 2021-2022 ஆம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு இழப்பீடு ரூ.36 லட்சம் மட்டுமே என, 7 கிராமங் களுக்கு எதன் அடிப்படையில் நிர்ண யம் செய்யப்பட்டது என்பதை இன்சூ ரன்ஸ் நிறுவனம் மற்றும் புள்ளியியல் துறையினர் விளக்கமளிக்க வேண்டும் என்றனர். இதையடுத்து வேளாண் இன்சூ ரன்ஸ் நிறுவனத்தின் தஞ்சாவூர் மாவட்ட  ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார் விளக்கமளித்தார். அப்போது விவசாயி கள் கேட்ட கேள்விக்கு எந்த பதிலை யும் அளிக்க முடியாமல் சதீஷ்குமார் திணறினார். தொடர்ந்து விவசாயிகள், பயிர்  காப்பீடு நிறுவனங்கள் விவசாயி களிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாயை பிரிமீயமாக பெறுவதில் காட்டும் முனைப்பை, அவர்களுக்கு  இழப்பீடு வழங்குவதில் காட்டுவ தில்லை. மேலும், உத்தரவாத மகசூல் தொடர்பாக உரிய வழிகாட்டுதலை கடைப்பிடிக்கவில்லை. எப்போது  சோதனை அறுவடை செய்யப்பட்டது,  அதன் அறிக்கை எப்போது வெளியிடப் பட்டது, எதன் அடிப்படையில் இழப்பீடு  நிர்ணயம் செய்யப்பட்டது என்பது  போன்ற அடுக்கடுக்கான விவசாயி களின் கேள்விகளால் காப்பீடு நிறுவனத் தின் ஒருங்கிணைப்பாளர் திணறினார். அப்போது விவசாயிகள், “கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் விவசாயிகள் பயிர் காப்பீடு இழப்பீடு தொகை வழங்குவதில் தாமதம், பாரபட்சம் ஆகியவை இருப்பதால் தமிழக அரசு உடனடியாக வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். சத்தீஸ்கரில் ரூ.15 ஆயிரம், தெலுங்கானாவில் ரூ.10 ஆயிரம், ஆந்திராவில் ரூ.13,500-ஐ, அந்தந்த மாநிலங்கள் பயிர் காப்பீடு திட்டத்துக்கு ஆகும் செலவை, பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு வழங்குவது போல், தமிழகத்திலும் ஏக்கருக்கு ரூ.10 ஆயிரத்தை விவசாயி களுக்கு நேரிடையாக வழங்க வேண்டும். இல்லையெனில், தமிழக அரசே பயிர் காப்பீடு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். கோடிக்கான ரூபாயை பிரிமீயமாக பெறும் தனியார் காப்பீடு  நிறுவனம், விவசாயிகளின் குறைகளை  நிவர்த்தி செய்யும் வகையில் தஞ்சாவூ ரில் அதன் கிளை அலுவலகத்தை திறக்க வேண்டும். இந்த திட்டத்தில்  கூட்டுறவு சங்கங்கள் விவசாயிகளுக் காக சேவை புரிகிறது. ஆனால் அந்த  சங்கத்துக்கு உரிய பங்களிப்பை காப்பீடு நிறுவனங்கள் வழங்குவ தில்லை. டெல்டா மாவட்டங்களிலேயே அதிக பரப்பளவில் விவசாயம் செய்யப் படும் தஞ்சாவூர் மாவட்டத்துக்கு கடந்த  சம்பா சாகுபடியில் ரூ.36 லட்சம் மட்டுமே  வழங்கப்பட்டுள்ளது. பிற மாவட்டங் களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதனால், எதிர் காலத்தில் பயிர் காப்பீடு பெறும் இன்சூ ரன்ஸ் நிறுவனங்களின் மீது விவசாயி களுக்கு நம்பிக்கை இல்லாமல் போகும்  நிலை ஏற்படும்” என்றனர். பின்னர், விவசாயிகள் தங்களது குறைகளை மாவட்ட ஆட்சியரிடம் தெரி வித்தனர். அதற்கு மாவட்ட ஆட்சியர் உரிய பதிலளித்தார்.
நாமம் இட்டு வந்த விவசாயிகள்
குறைதீர்க்கும் கூட்டம் நடை பெற்ற போது தமிழக அனைத்து விவ சாயிகள் சங்க கூட்டியக்க மாநில துணைத் தலைவர் கக்கரை சுகுமாரன் தலைமையிலான விவசாயிகள், நெற்றி யில் திருநாமம் இட்டுக் கொண்டு வந்து  மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை வழங்கினர். அதில், “விவசாயி களுக்கு பயிர் காப்பீடு திட்டத்தில், கடந்த சம்பா சாகுபடியில் தஞ்சா வூர் மாவட்டத்தில் விவசாயிகள் வஞ்சிக்கப்பட்டு, ஏமாற்றப்பட்டுள்ள தாகவும், இதுகுறித்து மறுபரிசீலனை செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” என கூறப்பட்டிருந்தது.