தஞ்சாவூர், ஜூன் 7- தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார், தஞ்சை ஆய்வுக் கூட்டத்தில் வேளாண் துறை அமைச்சரிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதா வது: காவிரிப் படுகை மாவட்டங்களில் ரூ.80 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் தூர்வாரும் பணிகளில் எவ்வளவு பணி கள் நடைபெற்று உள்ளதோ, அதற்கான தொகையை மட்டும் விடுவிக்க வேண்டும். சிறப்பு குழுக்கள் மூலம் நேரடி கள ஆய்வு செய்து நிறைவு அறிக்கை தயாரிக்கப்பட்டு வெளியிட வேண்டும். குறுகிய கால விதை நெல் கை யிருப்பு குறித்து அரசு அறிவித்துள்ள அறிவிப்பில் 3675 டன் என்றால், இலக்கிற்கு ஏக்கருக்கு 7.5 கிலோ போதுமானதாக இல்லை. எனவே ஏறக்குறைய 10,000 டன் வரை கிடைக்க ஆவன செய்திட வேண்டு கிறோம். பல்வேறு காரணங்களால் உரப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலை யில், ஒன்றிய அரசிடமிருந்து தமிழ கத்திற்கான ஒதுக்கீட்டை பெற்று உரம் தட்டுப்பாடு இல்லாமல் கிடைத்திட நட வடிக்கை எடுக்க வேண்டும். பயிர் காப்பீட்டு நிறுவனத்தை உடனே தேர்வு செய்திட வேண்டும். கேரள அரசு போன்று மாநில அரசும் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை செயல் படுத்திட ஆலோசிக்க வேண்டும். இரண் டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நடை பெறும் வேளாண் தொழில், மனித வள மேம்பாடு அறிக்கை, தனி நபர் வரு மானம், குறைந்த மாவட்டங்களில் டெல்டா மாவட்டங்கள் உள்ளன. வேளாண் பெருந்திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்புகளை உரு வாக்க முன்வர வேண்டும். குறுவை தொகுப்பு திட்டத்தை சமூகநீதி அடிப்ப டையில் அனைவருக்கும் கிடைத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும். விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப் பட்ட நெல்லை பாதுகாக்க போதிய சேமிப்புக் கிடங்குகளை உருவாக்க வேண்டும். இவ்வாறு அம்மனுவில் கூறப் பட்டுள்ளது.