districts

img

மாநில அளவிலான கராத்தே போட்டி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

தஞ்சாவூரில் நடந்த மாநில அளவிலான கராத்தே போட்டியில், கபிஸ்தலத்தை அடுத்த வடசருக்கை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். இதில் அனன்யா முதலிடத்தையும், பிரித்விராஜ், லோசினி இரண்டாம் இடத்தையும், பரணிதரன், தர்மதேவா மூன்றாம் இடத்தையும் பெற்றனர். போட்டிகளில் வென்ற மாணவர்களை ஊராட்சி மன்றத் தலைவர் ஜெகன்நாதன், கூடுதல் வட்டாரக் கல்வி அலுவலர் ஜெயமீனா, தலைமை ஆசிரியை புவனேஸ்வரி உள்ளிட்ட பலர் பாராட்டினர்.