கும்பகோணம், மார்ச் 9- உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப் போர் சங்கம் சார்பில் மகளிர் தின விழா மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற் றது. கூட்டத்திற்கு நகர பொருளாளர் ராஜேஸ் வரி தலைமை வகித்தார். ஒன்றியத் தலை வர் காமாட்சி, மாநிலக் குழு உறுப்பினர் பழ. அன்புமணி, கும்பகோணம் ஒன்றிய நிர்வா கிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில், தஞ்சை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதார மேம் பாட்டிற்காக அறிவிக்கப்பட்டு இருக்கும் இந்திய ஓவர்சீஸ் வங்கி பணிக்கு கல்வி தகுதியை 10-ஆம் வகுப்பாகவும் வயது வரம்பை 45 ஆகவும் சிறப்பு சலுகையாக அனுமதித்து பணி வழங்க வேண்டும், ஜூலையில் தில்லியில் நடைபெறும் ஆர்ப் பாட்டத்திற்கு திரளாக கலந்து கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவாக, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கத்தின் கும்ப கோணம் ஒன்றியத் தலைவர் காமாட்சிக்கு சக்தி ரோட்டரி சங்கம் சார்பில் தன்னம் பிக்கை சாதனை விருது வழங்கப்பட்டது.