districts

img

பாஜக அரசை கண்டித்து சிபிஎம் தெருமுனை பிரச்சாரம்

தஞ்சாவூர், மார்ச் 30-  அதானி கார்ப்பரேட் குழுமத்தின் மாபெரும் மோசடிக்கு துணை போன, மோடி தலைமையிலான பாஜக அரசைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சை மாநகரக்குழு சார்பில் தஞ்சாவூர்-சிவ கங்கை பூங்கா அருகில் தெரு முனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.  மாநகரச் செயலாளர் எம்.வடிவேலன் தலைமை வகித்தார். மாநகரக்குழு உறுப்பினர் ராஜன்,வர வேற்றார். மாவட்டச் செயலா ளர் சின்னை.பாண்டியன் கண்டன உரையாற்றினார். மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.  கூட்டத்தில், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என். சிவகுரு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் என்.குரு சாமி, என்.சரவணன், களப் பிரன், இ.வசந்தி, ஒன்றியச் செயலாளர் கே.அபிமன்னன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.