districts

img

தோழர் எஸ்.சுத்தானந்தம் நினைவேந்தல் நிகழ்ச்சி

தஞ்சாவூர், மே 22-  தஞ்சாவூர் பெசன்ட் அரங்கில் லிகாய் மாநிலத் தலைவராக இருந்து மறைந்த தோழர் எஸ்.சுத்தானந்தம் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்ச்சி அகில இந்திய எல்ஐசி முகவர்கள் சங்கம் (லிக்காய்) தமிழ் மாநிலக்குழு சார்பில் நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு மாநில செயல் தலைவர் பூவலிங்கம் தலைமை வகித்து, மறைந்த தோழர் எஸ்.சுத்தானந்தம் படத்தை திறந்து வைத்தார்.  மூத்த தலைவர் தீக்கதிர் என்.சீனிவாசன், லிக்காய் மாநில பொதுச் செயலாளர் எஸ்.ஏ.கலாம், லிக்காய் மாநில செயலாளர்கள் என்.ராஜா, குமார், மாநிலப் பொருளாளர் தாமோதரன், கோட்டப் பொதுச் செயலாளர் கோபாலகிருஷ்ணன், கோட்டத் தலைவர் தங்கமணி, கோட்ட அமைப்புச் செயலாளர் ஸ்ரீதர், பொருளாளர் சம்பத், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க கோட்டத் தலைவர் செல்வராஜ், எல்ஐசி ஓய்வூதியர் சங்க கோட்டத் தலைவர் ஆர்.புண்ணியமூர்த்தி ஆகியோர் இரங்கல் உரையாற்றினர். லிக்காய், கிழக்கு கோட்டச் செயலாளர் கருணாநிதி நன்றி கூறினார். 

;